விடுகதைகள் 1000

1. ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி அது என்ன? 
* வெள்ளைப்பூண்டு

2, பூத்த போது மஞ்சள், காய்ந்த போது சிவப்பு, பழுத்த போது கறுப்பு அது என்ன? *பேரீச்சம்பழம் 

3.அரைப்படி அரிசி பொங்கி ஆயிரம் பேர் உண்டு அரைச்சட்டி மிச்சம் அது என்ன ? *சுண்ணாம்பு அடிமேல் 
4.அடிவாங்கி அனைவரையும் சொக்க வைக்கும் அது என்ன? *மிருதங்கம் 

5.இரவல் கிடைக்காதது, இரவில் கிடைப்பது அது என்ன? 
*தூக்கம்

6.காட்டிலே தொங்கும் பொட்டலம் காவல் நிறைந்த பொட்டலம். அது என்ன? *தேன்கூடு 

7.பகலில் துயில் வான், இரவில் அலறுவான் அவன் யார்? *ஆந்தை

8. வெள்ளிப்பிசிறு வாயை மூடும், வெயில் வந்தால் கரைந்து மறையும் அது என்ன? 
* பனி 

9. சின்ன மீசைக்காரன், மியாவ் ஓசைக்காரன் அவன் யார்? *பூனை 

10. பச்சைச் செடியில் தயிர் சாதம் அது என்ன ? *மல்லிகைப்பூ / செடி 

11. பல்லைப் பிடித்து அழுத்தினால் பதறிப்பதறி அழுவாள் அவள் யார்? 
*ஆர்மோனியப்பெட்டி 

12. பீமனுக்கு சோறு போட்டு வீசியில் கிடப்பான் அவன் யார்? *இலை

 13. பெத்த பிள்ளை கொடுக்காததை வளர்த்த பிள்ளை கொடுக்கும் அது என்ன ? 
*தென்னம்பிள்ளை 

14.பொரித்ததும் நடக்கும் அது என்ன? 
*கோழிக்குஞ்சு

15. மரத்துக்கு மேலே பழம், பழத்துக்கு மேலே மரம், அது என்ன? 
*அன்னாசிப்பழம் 

16. பக்கத்தில் இருப்பான், படுத்தால் மறைவான் அவன் யார்? 
*நிழல் 

17. லிவிட் வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்? *நாட்காட்டி

 18.தண்ணீரில் விளையும் கல், தண்ணீரில் கரையும் கல், அது என்ன? 
*உப்புக்கல்

 19. கணுக்கணுவாய் தெரிந்தாலும் அணு அணுவாய் இனிப்பான். அவன் யார் ?  *கரும்பு 

20.தரையிலும் இருப்பான், தண்ணீரிலும் இருப்பான் அவன் யார்? 
*தவளை 

21.தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்?
*பென்சில்

22. காட்டு மரம் என்றாலும் கானம் தரும் மரம். அது என்ன? *மூங்கில்

 23. அடிக்கடி தாவுவான், அரசியல்வாதியல்ல. அவன் யார்? 
*குரங்கு 

24. அண்ணனுக்கு எட்டாது; தம்பிக்கு எட்டும். அது என்ன? *உதடு 

25. ஆயிரம் பேர் அணிவகுப்பிலும் பொட்டுத் தூசி கிளம்பாது. அது என்ன? *எறும்பு

 26. அட்டைக்கரிப் பெண்ணுக்கு உச்சந்தலை மஞ்சள் அவள் யார்? 
*பனங்காய் 

27.ஆவணி பிறப்பது எதனால், நாடகம் முடிவது எதனால்? 
* ஆடிமுடிவதால்






Comments